50 யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு அளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு.. என்ன காரணம்?

1981ஆம் ஆண்டுக்கு பிறகு இதுபோல பெரும் அளவிலான யானைகள் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.

zimbabwe elephants

யானை

ஜிம்பாம்வே நாட்டில் உணவு பஞ்சத்தை போக்கும் நோக்கில் கடந்த ஆண்டு 200 யானைகளை கொன்றதை போல நடப்பாண்டில் மேலும் 50 யானைகளை கொன்று இறைச்சியை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி தற்போது அறியலாம்..
உலகளவில் போட்ஸ்வானா நாட்டுக்கு பிறகு அதிக யானைகளின் எண்ணிக்கையை கொண்ட நாடாக ஜிம்பாப்வே உள்ளது. அங்கு சுமார் 84,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஜிம்பாம்வே சுற்றுலா யானைகளை மையமாக கொண்டு இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இங்குள்ள Save Valley சரணாலயத்தில் மட்டும் தற்போது 2,550 யானைகள் உள்ளன. ஆனால் இங்கு 800 யானைகளை மட்டுமே பராமரிக்க முடியும்.
ஜிம்பாப்வேயில் யானைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதாலும், தேவையான அளவைக் காட்டிலும் அதிகமாகவும் இருப்பதால் நாட்டின் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், மனித - விலங்குகள் மோதல் அதிகரித்திருப்பதாகவும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், எல் நினோ மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜிம்பாப்வேயில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்நாட்டு மக்கள் தொகையில் பாதியளவு பேருக்கு சரியான உணவு கிடைக்காமல் பசி பட்டினியால் வாடி வருகின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு சுமார் 200 யானைகள் கொல்லப்பட்டு, நாட்டு மக்களுக்கு யானை இறைச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டுக்கு பிறகு இதுபோல பெரும் அளவிலான யானைகள் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். இது பெரும் விமர்சனத்துக்கும் ஆளானது. இதே போல நடப்பாண்டிலும் மேலும் 50 யானைகளை கொல்ல ஜிம்பாம்வே அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் யானை தந்தங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பாதுகாக்கப்படும். உலக வனவிலங்கு சட்டங்களின்படி யானை தந்தங்களை விற்பனை செய்ய முடியாது.
லேட்டஸ்ட்
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களின் டிஜிட்டல் பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம். அரசியல் /ஆட்டோமொபைல்/தொழில்...மேலும் பார்க்க

முடிந்தது