டிரெண்டிங்
திருவண்ணாமலை கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்? வைகாசி மாதப் பௌர்ணமி கிரிவலம் தேதி மற்றும் நேரம்
ஒவ்வொரு மாதப் பௌர்ணமிக்கு கிரிவலம் செல்வது விசேஷமானது என்பதால், கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதால், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு எந்த நேரத்தில் கிரிவலம் செல்ல வேண்டும் என்பதை பற்றிய விவரங்களை வெளியிடும். பங்குனி மாத பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் செல்ல வேண்டும்?

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு தனிச்சிறப்புகள் உள்ளன. மே அல்லது ஜூன் மாதம் வரும் வைகாசி மாதப் பௌர்ணமி அன்று தான் முருகப்பெருமான் அவதரித்தார். இந்த பௌர்ணமி எப்போது வருகிறது, சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.
Photo : Times Now Digital
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமிக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சமீபகாலமாக கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பௌர்ணமி நாட்கள் மட்டுமல்லாமல், பண்டிகை நாட்கள், விரத நாட்களிலும், கிரிவலம் செல்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களில் கிரிவலம் செல்வது தவிர்த்து, பௌர்ணமிக்கு கிரிவலம் செல்வது விசேஷமானது என்பதால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு எந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்தது என்பதை பற்றிய விவரங்களை வெளியிடும். பங்குனி மாத பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் செல்ல வேண்டும்?
படிக்க: 2025 பௌர்ணமி கிரிவலம் கேலண்டர்
பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஒரு திதி பிறக்கும் நேரம் முடியும் நேரம் மாறிக்கொண்டே இருக்கும். வைகாசி மாத பௌர்ணமி செவ்வாய்க்கிழமை, ஜூன் 10, நண்பகல் 12:21 தொடங்கி, புதன் பிற்பகல் 1:52 மணிக்கு நிறைவடைகிறது.
செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாட்களிலும் பௌர்ணமி
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பொதுவாக பௌர்ணமி திதி துவங்கும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டால் போதுமானது. இந்த மாதம், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களிலும் பௌர்ணமி உள்ளது.
இரவு நேரத்தில் கிரிவலம் செல்வதே சிறந்தது
பொதுவாகவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது என்பது, இரவு நேரத்தில் பௌர்ணமி வெளிச்சத்தில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் நம் மீது படும்பொழுது உடல் ரீதியாக, மன ரீதியாக ஆற்றலை ஈர்க்கும். எனவே பகல் நேரத்தில் பௌர்ணமி கிரிவலம் செல்வதை விட இரவு நேரத்தில் கிரிவலம் செல்வது இன்னும் சிறப்பானது. செவ்வாய் இரவு முழுவதும் பௌர்ணமி இருப்பதால், செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு நேரத்தில் கிரிவலம் செல்லலாம். செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் செல்வதால், கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத் தடை விலகும்.
வைகாசி விசாகமும் வைகாசி மாதப் பௌர்ணமியும்
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதப் பௌர்ணமி அன்று தான் முருகன் அவதரித்த வைகாசி விசாகம் கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு, பௌர்ணமிக்கு ஒரு நாள் முன்பே, ஜூன் 9ம் தேதி, வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Sayee Balaji author
வணக்கம். என் பெயர் சாயி பிரியதர்ஷினி. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக ஆங்கிலத்தில் சில ஆண்டுகளும், 6+ ஆண்டுகளாக தமிழில் ஊடகத் துறையில் டிஜிட்டல் பிரிவில் பணிய...மேலும் பார்க்க
முடிந்தது
Subscribe to our daily Newsletter!
சமீபத்திய செய்தி
“கல்யாணத்துக்கு நோ சொல்ல முடியாது.. ஆனால் கணவனை கொலை செய்ய முடியும்” - கங்கனா ரனாவத் ஆவேசம்
2 முறை விவாகரத்துக்கு பின் காதலருடன் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண்.. தந்தை, சகோதரனால் நேர்ந்த பயங்கரம்..!
தீர்த்தகிரி மலை முருகன் கோவில் சிறப்புகள்... அறுபடை வீடுகளில் இல்லாத சிறப்புகள் என்ன தெரியுமா?
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்
8ஆவது படித்தவர்களுக்கு இலவச தொழில் பயிற்சியும் வேலையும் வாங்கித்தரும் தமிழ்நாடு அரசு! விபரங்கள் இதோ