டிரெண்டிங்
20 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளை பலாத்காரம் செய்த மருத்துவர்.. வெளிவந்த பகீர் தகவல்கள்..
தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களில் 70க்கும் மேற்பட்டவர்களை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டறியப்பட்டது.

மாதிரி படம் (ஏஐ)
தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண் நோயாளிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மருத்துவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் அந்நகரில் பிரபல மருத்துவராக அறியப்படுபவர் ஆவர். மருத்துவர் ஆர்னே பை, தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக அவர் மீது பல புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் கடந்த 20 ஆண்டுகளில் அதாவது 2004 முதல் 2022 வரை மருத்துவராக பணியாற்றிய ஆர்னே தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களில் 70க்கும் மேற்பட்டவர்களை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவராக பணிபுரிய தடை விதிக்கப்பட்டது.
அவர் மீது பல பெண்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆர்னே மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானது. மேலும் அவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்திருந்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நார்வே நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி மருத்துவர் ஆர்னேவுக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது தனக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் எனவும் தன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட 70-க்கும் மேற்பட்ட பாலியல் புகாரில் 20 மட்டும் தனக்கு ஞாபகம் இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது
Arun K author
மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களின் டிஜிட்டல் பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம். அரசியல் /ஆட்டோமொபைல்/தொழில்...மேலும் பார்க்க
முடிந்தது
Subscribe to our daily Newsletter!
சமீபத்திய செய்தி
மத்திய அமைச்சர் எல்.முருகன் திடீரென தொப்பி அணிய காரணம் இதுதான்.. அதில் ஒரு சிறப்பு இருக்கு!
இனி ஏ.சி. கூலிங்கை 20 டிகிரிக்கு கீழ் குறைத்து வைக்க முடியாது.. லிமிட் செட் செய்ய அரசு பலே திட்டம்
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம் எல்லாவற்றுக்கும் பெஸ்ட் காம்பே..கேரளா பெண்கள் கைமணத்தில் தயாராகும் தக்காளி கறி ரெசிபி- Kerala Classic Food
'எனக்கு இந்தி தெரியாது..' குபேரா மும்பை விழாவில் தனுஷ் கொடுத்த 'தக் லைஃப்' பதில்!
1 கப் கார்ன் , குடைமிளகாய் சேர்த்து புதுச்சேரி மக்கள் செய்யும் டேஸ்டியான ஃபிரெஞ்சு பாஸ்தா! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்- Puducherry Cuisine