தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா? கேரளா, புதுச்சேரியிலும் தினக்கூலி அதிகரிப்பு

நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்திற்காக சம்பளம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற மக்களுக்கு ஊதியத்துடன் 100 நாட்களுக்குக் வேலை வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 11.92 கோடி பேர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர், தமிழகத்தில் 88,16,448 பேர் உள்ளனர். தமிழகத்தில் 2025-26 நிதியாண்டிற்கு நாளொன்றுக்கு சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக உயர்ந்துள்ளது (ரூ.17 அதிகரிப்பு). கடந்தாண்டு தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் பொருட்கள் வாங்கியதற்கு ரூ.1,400 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய அரசு இந்த நிலுவைத்தொகையை விரைவில் விடுவிக்க உள்ளதாகவும், இந்தாண்டு தமிழகத்திற்கு முதல் கட்டமாக சம்பளத்திற்கு ரூ.920 கோடி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.26 உயர்ந்து ரூ.400 சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரூ.23 உயர்ந்து ரூ.369 சம்பளம் வழங்கப்படும். கர்நாடகாவில் ரூ.21 உயர்ந்து ரூ.370 சம்பளம் வழங்கப்படும். புதுச்சேரியில் ரூ.17 உயர்ந்து ரூ.336 சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Ramprasath author

    மலைக்கோட்டை மண்ணின் மைந்தன். பி.காம் பட்டதாரி. 9 வருடங்களாக பத்திரிகை துறைய...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed