பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிப்பு..! மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன புதுச்சேரி அரசு

பள்ளிகள் திறப்புக்கு பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கி வகுப்புகள் நடந்து வருகிறது. அக்னி வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள் திறப்பு ஜூன் 2-ம் வாரத்துக்கு தள்ளிபோனது. ஆனால் இந்த வருடம் கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கும் பரவியது. இதன்காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மே மாதம் இறுதியில் மழை பெய்தது. வெப்ப தணிந்து இதமான சூழல் நிலவியதால் பள்ளிகள் திட்டமிட்ட படி திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று வேலூர், ஈரோடு, மதுரை, சென்னை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வெயில் சதமடித்தது. கடந்த வாரத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “ புதுச்சேரி நிலப்பரப்பானது வடகிழக்கு பகுதியில் இருப்பதால் தற்போது நிலவும் இந்த சூழ்நிலை மாறி வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும். மேலும் வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் செல்லும் நிலை ஏற்படும். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். எனவே பள்ளி திறப்பை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்து ஜூன் 15-ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். காரைக்காலில் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேம் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதனை ஏற்று இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14, 21-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.
    Ramprasath author

    மலைக்கோட்டை மண்ணின் மைந்தன். பி.காம் பட்டதாரி. 9 வருடங்களாக பத்திரிகை துறைய...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed