டிரெண்டிங்
புதுச்சேரியில் இன்று மின் தடை அறிவிப்பு.. முழு விவரம் இதோ
புதுச்சேரியில் ஜிப்மர் பழைய மின்பாதையில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (11.06.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.இதே போல் ஜிப்மர் பழைய மின்பாதையில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்குமுடையான்பேட், செயின்ட் பால் பேட், முத்துலிங்க பேட், கொட்டம்பாளையம், புதுப்பேட், லாஸ்பேட்டை, கல்லூரி சாலை, முருகேசன் நகர், செல்லபெருமாள் பேட், பெத்துசெட்டிப்பேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லை கண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.மேற்கண்ட தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Ramprasath author
மலைக்கோட்டை மண்ணின் மைந்தன். பி.காம் பட்டதாரி. 9 வருடங்களாக பத்திரிகை துறையில் பயணிக்கிறேன். அரசியல், விளையாட்டு, க்ரைம் தொடர்பான செய்திகளை எழுதி வருக...மேலும் பார்க்க
முடிந்தது
Subscribe to our daily Newsletter!
சமீபத்திய செய்தி
கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ குழந்தைகள், கணவர் குடும்பத்துக்கே விஷம் வைத்த இளம் பெண்..
Emergency exit: விமானத்தில் இருக்கும் அவசரக் கதவின் நோக்கம் என்ன? பயன் என்ன?
இது முதல் முறையல்ல.. கேரளாவில் ஏற்பட்ட ஏர் இந்தியா கோர விமான விபத்து நினைவிருக்கா?
மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல் மீது விமானம் விழுந்ததில் 5 மாணவர்கள் பலி.. விமான விபத்தில் உயிரிழப்பு 170 ஆக அதிகரிப்பு..!
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ் எது? கேரளா ஆயுர்வேத நிபுணரின் டிப்ஸ்- Kerala Juice