ஜூன் 2 ஸ்கூல் திறந்ததும்.. 2 வாரத்துக்கு மாணவர்களுக்கு ஜாலிதான்.. குட் நியூஸ் சொன்ன கேரளா அரசு!
கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் நாளை பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஜூன் 2-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. திருவணந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது.
கேரளா மாநிலம் கொல்லத்தில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு அங்கு இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாவட்டங்களில் கனமழையை கண்காணித்து அதற்கு ஏற்றார் போல் பள்ளிகள் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் நாளை பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பள்ளி விடுமுறை தொடர்பான எந்த அறிவிப்பையும் இதுவரை கேரள அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இதன்காரணமாக திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும் எனத் தெரிகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் 2 வாரத்துக்கு புத்தகப்பைகளை சுமந்து வரத் தேவையில்லை, 2 வாரத்துக்கு பாட வகுப்புகள் நடக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த முதல் இரண்டு வார காலத்திற்கு மாணவர்களுக்கு சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்களுக்கு பதிலாக, சமூகம் சார்ந்த முக்கியமான விஷயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி இரண்டு வார அமர்வுகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்பார்கள், அதே நேரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு இதேபோன்ற திட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில காவல்துறை, கலால் வரி, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சமூக நீதி, தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பிற தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு சமூக வகுப்புகளை நடத்துவார்கள் எனத் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Ramprasath author
மலைக்கோட்டை மண்ணின் மைந்தன். பி.காம் பட்டதாரி. 9 வருடங்களாக பத்திரிகை துறைய...மேலும் பார்க்க
முடிந்தது
கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு? மதுரை ஆரப்பாளையம் போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
2026இல் பாஜகவின் டார்கெட் இதுதான்.. மதுரையில் அண்ணாமலை ஆவேச பேச்சு
ஒரு கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு.. பாக்யதாரா BT-6 கேரளா லாட்டரி முடிவுகள் வெளியானது.. அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா
Top News Today (09.06.2025): இன்றைய முக்கியச் செய்திகள்
சென்னையின் முக்கிய ஏரியாக்களில் (10.06.2025) செவ்வாய்க்கிழமை மின் தடை அறிவிப்பு.. முழு விவரம் இதோ
End of Feed
கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு? மதுரை ஆரப்பாளையம் போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
ஒரு கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு.. பாக்யதாரா BT-6 கேரளா லாட்டரி முடிவுகள் வெளியானது.. அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா
Top News Today (09.06.2025): இன்றைய முக்கியச் செய்திகள்
சென்னையின் முக்கிய ஏரியாக்களில் (10.06.2025) செவ்வாய்க்கிழமை மின் தடை அறிவிப்பு.. முழு விவரம் இதோ
22 பேருடன் சென்ற சரக்குக் கப்பலில் திடீர் தீ விபத்து.. கேரளா துறைமுகம் அருகே பரபரப்பு