தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இனி முகக்கவசம் அணிவது கட்டாயம்.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Corona Update In Tamilnadu: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் சமீப காலமாக கொரோனா தொற்று மீண்டும் பெரிதும் பரவத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் இதன் தாக்கம் கணிசமாக உயர்ந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் கைகளை சுத்தமாக கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல், மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், காய்ச்சல் வார்டுகளில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல்நலக் குறைவு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முடிந்தது
Follow Us:
End of Feed