தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கொலம்பிய அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு.. பதறவைக்கும் வீடியோ..!

இச்சம்பவத்தில் தொடர்புடைய மைனர் சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.

மிகுவல் யூரிப்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கொலம்பிய அதிபர் வேட்பாளர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஆளும் தரப்பும், எதிர்க்கட்சி தரப்பும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியாக திகழும் கன்சர்வேட்டிவ் டெமோகிரடிக் சென்டர் கட்சி சார்பில் 39 வயதாகும் எம்பி மிகுவல் யூரிப் போட்டியிட உள்ளார். இதனால் அவர் கொலம்பியாவின் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பரப்பரையை தொடங்கி ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று கொலம்பியாவின் பகோடா மாகாணத்தில் உள்ள ஃபாண்ட்டிபான் என்ற நகரில் உள்ள பூங்கா ஒன்றில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் மேலும் சில எம்பிக்களும், கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் உடன் இருந்தனர்.
யூரிப், மைக்கில் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை பின்னால் இருந்து, அவரை நோக்கி துப்பாக்கியால் யூரிப்பின் தலையில் இரண்டு முறை துப்பாக்கி சூடு விழுந்தது. இதனை அடுத்து ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மைனர் சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.
கொலம்பிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் யூரிப், துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே, தற்போதைய அதிபர் கஸ்தாவோ பெட்ரோ, இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார், மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க

முடிந்தது
Follow Us:
End of Feed