சிறுமியாக இருந்தபோது பலாத்காரம் செய்த பெண்ணையே 6 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்ய ஜாமீன் பெற்ற குற்றவாளி..!

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து கொள்வதற்கு இருவீட்டாரும் சம்மதித்ததாக ஒடிசா உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி படம் (ஏஐ)
6 ஆண்டுகளுக்கு முன் சிறுமியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும் இளைஞருக்கு அவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்காக ஒரு மாதம் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞனுக்கு அவரால் 6 வருடங்களுக்கு முன்னர், (16 வயது சிறுமியாக இருந்த போது) பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயது பெண்ணை திருமணம் செய்வதற்கு ஒடிசா உயர் நீதிமன்றம் ஒரு மாதம் ஜாமின் வழங்கி இருக்கிறது.
சம்பந்தப்பட்ட இளைஞர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் 2023 ஆம் ஆண்டு போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 2019 ஆம் ஆண்டு முதல் தன்னுடன் உடல் ரீதியான உறவில் அந்த இளைஞர் இருந்து வந்ததாகவும் இதனால் 2020, 2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை தான் கர்ப்பம் அடைந்தேன் எனவும் ஆனால் தன்னை கட்டாயப்படுத்தி அந்த இரண்டு முறையும் குழந்தையை பெற்றெடுக்காமல் நிர்பந்தம் செய்து, அந்த இளைஞர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.
இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து கொள்வதற்கு இருவீட்டாரும் சம்மதித்ததாக ஒடிசா உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது திருமணத்திற்காக அந்த இளைஞர் தற்போது ஒரு மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க

முடிந்தது
Follow Us:
End of Feed