காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாதீங்க.. பெற்றோர்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கவுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி(நாளை) திறக்கின்றன. கர்நாடகாவில் மே29 -ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பரவல் தொற்று மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
கர்நாடகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, “
  • காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க கூடாது. அந்த மாணவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் குணமடைந்த பின்பே பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருக்கிறதா என்பதை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அதுபற்றி பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியில் இருந்து மாணவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால், அதற்காக உரிய சிகிச்சை எடுத்து கொள்வது அவசியமாகும்.
  • பள்ளிகளில் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது, மாணவர்கள் கூட்டமாக நிற்பதை தவிர்ப்பது, இடைவெளியை பின்பற்றுவது, தேவைப்பட்டால் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    Ramprasath author

    மலைக்கோட்டை மண்ணின் மைந்தன். பி.காம் பட்டதாரி. 9 வருடங்களாக பத்திரிகை துறைய...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed