பல்பு வாங்கிய வில்லி.. சதி திட்டத்தை சுக்குநூறாக்கிய கார்த்திக்!

சந்திரகலா சறுக்கி விழுந்து ஆஸ்பிட்டல் போக, பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு வருகிறார்.

கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திர கலாவின் திட்டத்தை கார்த்திக் சுக்கு நூறாக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சிவனாண்டி விருமனுக்கு போன் போட்டு கார்த்திக் கலச பூஜைக்கு வந்தால் தகவல் கொடுக்க சொல்லி சொல்கிறான்.இதைத்தொடர்ந்து இங்கே மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.
இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கு இருக்கக் கூடாது என திட்டமிட்டு வாழைப்பழம் தோலை கீழே போட்டு அவளை வழுக்கி விழ வைக்கின்றனர். பிறகு மயில்வாகனம் சந்திர கலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ்-ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான்.
இங்கே மண்டபத்தில் இளையராஜாவும் இங்கும் அங்குமாக நடந்தபடி இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    Sreeja kumar author

    என் பெயர் ஸ்ரீஜா குமார். கடந்த 9 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed