4 ஐபிஎல் விருதுகளை வென்ற தமிழக வீரர் சாய் சுதர்சன்.. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணி..!

தமிழக வீரரான சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பி மட்டுமல்லாது மொத்தம் நான்கு விருதுகளை வென்று அசத்தியிருக்கிறார்

சாய் சுதர்சன்
பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது
பரபரப்பான இறுதிப்போட்டி..
18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஒன்றரை மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வந்தது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இதன் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்தது. விராட் கோலி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
இறுதிவரை போராடிய பஞ்சாப்..
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி கடைசி ஓவர் வரை போராடிய போதும் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, ஐ.பி.எல் போட்டிகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இக்கட்டான கட்டத்தில் அசத்தலாக பந்து வீசி இரண்டு விக்கட்டுகளை வீழ்த்திய குருணால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
4 விருதுகள் வென்ற சாய் சுதர்சன்..
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன், குஜராத் அணிக்காக களம் இறங்கி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். அவர் இத்தொடரில் 15 போட்டிகளில் களமிறங்கி 759 ரன்களை குவித்துள்ளார், இதில் நான்கு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும்
தமிழக வீரரான சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பி மட்டுமல்லாது அதிக பவுண்டரிகள் குவித்த வீரர் விருதையம், வளர்ந்து வரும் இளம் வீரர் விருதையும், இந்த சீசனின் ஃபேண்டஸி கிங் என்ற விருதையும் என மொத்தம் நான்கு விருதுகளை வென்று அசத்தியிருக்கிறார்.
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க

முடிந்தது
Follow Us:
End of Feed