வைகாசி விசாகம் 2025 ! விரதம் இருக்க முடியாதவர்கள், இதை செய்யலாம், முருகனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்
வைகாசி விசாகம் திருநாளுக்கு பலரும் சஷ்டி விரதம் போலவே ஆறு நாட்களுக்கு விரதம் இருப்பார்கள். சிலர் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள். சிலருக்கு விரதம் இருக்க முடியாது. வைகாசி விசாகத்துக்கு விரதம் இருக்கவோ, பூஜை செய்யவோ முடியாதவர்கள், முருகனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் போதும். என்னென்ன விளக்குகள் என்னென்ன பலன் தரும் என்று பார்க்கலாம்.
Vaikasi visagam Lord Muruga
உலகம் முழுவதிலுமுள்ள முருகன் கோவிலில் இன்று, ஜூன் 9, 2025 வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கலியுக தெய்வமாக கருதப்படும் முருகப்பெருமான் அவதரித்த திருநாள் தான் வைகாசி விசாகம். வைகாசி மாதம், சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளில் பௌர்ணமி திதி தோறும் நாளில், முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தார். எப்படி விரதம் இருந்து வழிபட்டாலும் முருகப்பெருமான் அருள் புரிவார்.
அசுர சக்திகளை வேரோடு அழிக்க முருகப்பெருமான் அவதரித்த தினத்தன்று எல்லாம் முருகன் கோவில்களிலுமே பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பாத யாத்திரை சென்று பக்தியை வெளிப்படுத்தி வழிபடுவார்கள்.
வைகாசி விசாகம் நாளில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றுங்கள்
முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்தவர், ஆறு தீப்பொறிகளாக அவதரித்த முருகப்பெருமான், ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர். இதனால் தான் முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றுவது விசேஷமானது. வீட்டிலேயோ அல்லது முருகன் கோவிலில், ஆறு அகல் விளக்குகள் ஏற்றி மனதார முருகனை வேண்டிக் கொள்ளுங்கள். இது போன்ற விசேஷமான நாட்களில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகப்பெருமானுக்கு ஆறு அகல் விளக்குகளை ஏற்றி மனதார வழிபாடு செய்தாலே, முருகனின் அருள் கிடைக்கும்.
வைகாசி விசாகம் அன்று வெற்றிலை விளக்கு ஏற்றினால் கிடைக்கும் பலன்
வெற்றிலையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றுவது மிக விசேஷமானது. தடைகளை நீக்கி, வேண்டிய வரங்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை, சொந்த வீடு அமைய வேண்டிய பிரார்த்தனை, சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். காரிய சித்தி உண்டாகும். தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் அல்லது ஆறு சஷ்டி திதிகள், அல்லது ஆறு மாதம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாள் போன்றவற்றில் வெற்றிலை வைத்து ஆறு அகல் விளக்கு ஏற்றினால், நினைத்தது கைகூடும்.
வைகாசி விசாகம் அன்று துவரை விளக்கு ஏற்றினால் கிடைக்கும் பலன்
முருகப்பெருமானுக்கு உரிய மிக விசேஷமான வழிபாட்டு முறைகளில் ஒன்று, துவரை விளக்கு. ஒரு தட்டு அல்லது வாழை இலையில் துவரம்பருப்பை பரப்பி, அதன் மீது விளக்கேற்றுவது தான் துவரை விளக்காகும். அல்லது அகல் விளக்கில் நெய் விடு, அதில் கொஞ்சம் துவரபருப்பை சேர்த்து விளக்கேற்றவும். நல்ல வேலை, பெரிய வளர்ச்சி, பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம், கடன் நெருக்கடிகள் தீர உதவும் மிக எளிமையான பரிகாரமாகும். ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம் அல்லது செவ்வாய் பலவீனமான நிலையில் இருந்தால் கூட, இந்த விளக்கு ஏற்றுவது எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்கும்.
வைகாசி விசாக நன்னாளில் முருகப்பெருமானை வழிபடுவது, எவ்வளவு கொடிய பகையாக இருந்தாலும் பகையால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த இன்னல்களையும் போக்கும் என்பது நம்பிக்கை. அசுரர்களை அழிக்க முருக பெருமான் அவதரித்த நாளில் முருகனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் எதிரிகள் காணாமல் போவார்கள் பகை விலகும்.
Sayee Balaji author
வணக்கம். என் பெயர் சாயி பிரியதர்ஷினி. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக ஆங்கிலத்தில் ...மேலும் பார்க்க
முடிந்தது
தமிழ் நாள்காட்டி 2025 - ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இன்றைய நல்ல நேரம், ராகு காலம், முகூர்த்தம், பஞ்சாங்கம்
கேரளாவின் காவல் தெய்வம் 'குட்டிச்சாத்தன்' – விசித்திர வழிபாடுகள் நடக்கும் விஷ்ணுமாயா கோவில்!
தீர்த்தகிரி மலை முருகன் கோவிலுக்கு போறீங்களா? பக்கத்திலேயே இருக்கும் இந்த கோவிலை மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ் நாள்காட்டி 2025 - ஜூன் 12ம் தேதி வியாழக்கிழமை இன்றைய நல்ல நேரம், ராகு காலம், முகூர்த்தம், பஞ்சாங்கம்
Kerala Blackmagic: அழகிய கேரளாவின் இன்னொரு முகம்.... செய்வினை, சூனியம், மாந்திரீகம்!
End of Feed
தமிழ் நாள்காட்டி 2025 - ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இன்றைய நல்ல நேரம், ராகு காலம், முகூர்த்தம், பஞ்சாங்கம்
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு.. குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் என டாடா குழுமம்
டாக்டர் டூ சினிமா நடிகை.. 'ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் புகழ் தீபா பாலு யார் தெரியுமா?
அவரை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பம் அடைந்தேன்.. பிறகுதான் திருமணம் செய்தேன்.. அமலா பால் ஓபன் டாக்!
அதைப் பார்த்துவிட்டு என் கணவர் 10 நாட்கள் என் பக்கத்தில் கூட வரவில்லை.. கீர்த்தி சுரேஷ் சொன்ன ஷாக் தகவல்!