வைகாசி மாத அமாவாசை எப்போது வருகிறது? மே 26 அல்லது மே 27? தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் என்ன...
வைகாசி மாதம் வரும் அமாவாசை ஜேஷ்ட அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது, திங்கள் அன்று வருகிறதா அல்லது செவ்வாய்க்கிழமை, சனி ஜெயந்தி அன்று அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வேண்டுமா என்று பார்க்கலாம்.
வைகாசி மாத அமாவாசை தேதி
ஜேஷ்ட அமாவாசை என்று அழைக்கப்படும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள் என்பது ஐதீகம்.எனவே, இந்த நாளில் அமாவாசை தர்ப்பணம் செய்வது, ஜாதக பித்ரு தோஷங்களை போக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி அமாவாசை தேதி
பொதுவாகவே, அமாவாசை, சஷ்டி, அஷ்டமி என்று திதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் நாட்களை பொருத்தவரை, சூரிய உதயத்தில் என்ன திதி இருக்கிறதோ அதைத்தான் அந்த நாளுக்கான திதியாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்
வைகாசி அமாவாசை திதி தொடக்கம் மற்றும் முடிவு
வைகாசி அமாவாசை திங்கட்கிழமை, மே 26 காலை 11:10 மணிக்குத் துவங்கி, செவ்வாய்க்கிழமை மே 27 காலை 9:14 மணிக்கு முடிகிறது. செவ்வாய்க்கிழமை அன்று நாட்களிலும் காலை உதய நேரத்தில் தான் அமாவாசை திதி இருக்கிறது
அமாவாசை திங்கட்கிழமையா அல்லது செவ்வாய்க்கிழமையா?
ஒரு சில நாட்களில், ஒரு திதி 24 மணி நேரத்துக்கும் குறைவாக வரும். அதே போலத்தான் இந்த ஜேஷ்ட அமாவாசை, திங்கள் முன்பகல் துவங்கி, செவ்வாய்க்கிழமை காலை முடிகிறது.
சோமவார அமாவாசை
அமாவாசை திதி செவ்வாய் காலை 9 மணிக்கு முன்பே முடிவதால், திங்கட்கிழமை மே 26 அன்று அமாவாசை அனுஷ்டிக்கப்படுகிறது. வைகாசி மாதம் வரும் அமாவாசை சோமவார அமாவாசையாகும்
Related stories
திதி கொடுக்க உகந்த நேரம்
திங்கட்கிழமை வரும் அமாவாசை, சிவபெருமானுக்கு உரிய நாளில் அமாவாசை வருகிறது. நண்பகலுக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம். பிறகு மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வரலாம்.
வைகாசி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்?
திதி கொடுக்க முடியாதவர்கள், தர்ப்பணம் செய்தவர்கள் என்று அனைவரும், குறைந்தது காகத்துக்கு உணவளிக்கலாம், அன்னதானம் செய்யலாம், பசுவிற்கு அகத்திக்கீரை, கோதுமை தவிடு, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம்.