திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.... 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

பொதுவாகவே விடுமுறை காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுமே, பொது தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதி தரிசனம்
பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கிட்டத்தட்ட 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். இந்த ஆண்டு கோடை விடுமுறை கடைசி சில தினங்கள் என்பதால், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறலாம். பொதுவாகவே விடுமுறை காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுமே, பொது தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மே மாத துவக்கத்திலிருந்து கணிசமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. சாதாரணமாகவே, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள கம்பார்ட்மெண்ட்களை எப்போதுமே ஐந்து அல்லது ஆறு கம்பார்ட்மென்ட்கள் பக்தர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களுமே, இந்த காம்ப்ளக்ஸில் உள்ள 31 கம்பார்ட்மெண்ட்களும் நிரம்பி, பக்தர்கள் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
ஞாயிறு மட்டுமே கிட்டதட்ட 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் நீண்டிருந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அன்ன பிரசாதம் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
கோடை விடுமுறை நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதால், திருப்பதி தேவஸ்தானம் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்ட ஒரு சில ஸ்பெஷல் தரிசன முறைகளை ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறை முடியும் வரை திருப்பதிக்கு தரிசன டோக்கன்கள் இல்லாமல் வருவதை தவிர்க்கலாம் என்ற அறிவிப்பையும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்வதற்கான முன்பதிவு டோக்கன்கள் வெளியாகி, கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்குள்ளேயே அனைத்து டோக்கன்களும் முன்பதிவு முடிந்துவிட்டன. ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்புபவர்கள் ஜூலை மாதம் வெளியாகும் ஹோமம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தரிசனம் பெறலாம்..
திருப்பதிக்கு நிகராக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்யும் தலமாக மாறிவரும் திருவண்ணாமலையிலும் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் மாடவீதிகளில் இருந்தே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    Sayee Balaji author

    வணக்கம். என் பெயர் சாயி பிரியதர்ஷினி. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக ஆங்கிலத்தில் ...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed