கோடை மழை அலெர்ட்.. செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

Tamil Nadu Weather : தமிழ்நாட்டில் இன்றைய தினமும் வேலூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெயில் சதமடித்துள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக 13 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை உச்சம் தொட்டு சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல, சென்னை, கடலூர், ஈரோடு, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சதமடித்தது.
இந்நிலையில், கோடை வெயிலுக்கு ஆறுதல் தரும் விதமாக மாலை வேளை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் இன்று மாலை வேளை கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. அத்துடன் சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேவேளை, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை இரு நாள்கள் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகம் இருக்கக் கூடும். இதனால் அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படாலம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
    Kannan V author

    ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed