தமிழ்நாட்டில் நாளை (09.06.2025) திங்கள்கிழமை மின் தடை பகுதிகள்.. மாவட்ட வாரியாக முழு விவரம் இதோ

Tamil Nadu Power Cut: தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை திட்டமிட மின் தடை சார்ந்த அறிவிப்புகள் முக்கிய தேவையாக உள்ளது. அதன்படி, நாளைய தினம் (ஜூன் 9) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விவரத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஜூன் 9 மின் தடை பகுதிகள்
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை வெப்பம் தீவிரமாக வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் காலம் முடிந்த பிறகும் பல இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டி கொளுத்துவதால் பொதுமக்களால் மின்விசிறி, ஏசி போன்றவை இல்லாமல் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
இப்படி இருக்க மின் வாரியம் தன் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகளை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகிறது. அந்த சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிப்பை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
அந்தவகையில் வாரத்தின் முதல் நாளான நாளை ஜூன் 9 திங்கள்கிழமை தமிழ்நாட்டில் மின் தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வெளியாகியுள்ளது. எனவே, பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின் தடை பகுதிகள்: கோயம்புத்தூர் எம்.ஜி. ரோடு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, ஒண்டிப்புதுார் - திருச்சி ரோடு, வி.கே.என்.நகர், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை அம்மன் நகர் ஆகிய இடங்கள்.
அதேபோல, கு.வடமதுரை, துடியலுார், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ.,காலனி, பழனிக்கவுண்டன்புதுார், பன்னிமடை, தாளியூர், திப்பனுார், பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கே.என்.ஜி.புதுார் ஆகிய பகுதிகள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகியவை.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர், புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி, கல்லிமண்டயம் ஆகிய இடங்கள்.
மேலும் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, தாசரிப்பட்டி, ராமபட்டினம்புதூர் ஆகிய இடங்கள்.
அதேபோல் கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தைச் சேர்ந்த கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
கரூர் மாவட்டத்தில் கருப்பம்பாளையம், கோப்பம்பாளையம், குப்பிச்சிபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், மின்னாம்பள்ளி, சங்கரம்பாளையம், புள்ளகவுண்டனூர், கவுண்டன்புதூர், பெரிய கவுண்டன்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.
    Kannan V author

    ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed