தமிழ்நாடு அரசு சேவை இல்லத்தில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; இரு கால்களை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்..!

கைதான மேத்யூ இதேபோன்று வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்ற கோணத்தில் அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

அரசு சேவை இல்லத்தில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை;
சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் பகுதியில் சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், விழுப்புரத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இந்த விடுதியில் சேர்ந்துள்ளார்.
இந்த இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் விழுப்புரம் மாணவி தூங்கிக்கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியால் மூடி தூக்கிச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது கத்தி கூச்சலிட்டு தப்பியோட முயன்ற சிறுமியை அந்த நபர், இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். வலிதாங்கமுடியாமல் அலறித்துடித்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக மாணவிகள் சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுமிக்கு முகம், மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் இரண்டு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்டத சிட்லப்பாக்கம் போலீசார் வெளியாட்கள் யாரும் உள்ளே வர வாய்ப்பில்லை என்பதால் காவலாளியை பிடித்து விசாரித்தனர். முதலில் எதுவும் தெரியாதது போல நடித்த அவர் பிறகு சம்பவத்தில் ஈடுபட்டது நான் தான் என ஒப்புக்கொண்டார்.
சிட்லப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த காவலாளி மேத்யூ (வயது 50 ) 14 ஆண்டுகளாக அங்கு வேலை பார்த்து வருகிறார். இவரின் தாயார் இங்கு உதவியாளராக வேலை செய்துள்ளார் அவர் பணியில் இருக்கும்போது இறந்ததால் கருணை அடிப்படையில் மேத்யூவிற்கு காவலாளி பணி கிடைத்தது.
கைதான மேத்யூ இதேபோன்று வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்ற கோணத்தில் அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், முதல்வர் உத்தரவுபடி அனைத்து சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளனர்.
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க

முடிந்தது
Follow Us:
End of Feed