தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil Nadu Weather : தமிழகத்தில் இன்று கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் நேற்றைய தினம் நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர மழை பெய்தது. நேற்றைய தினம் அதிகபட்சமாக கோவை சின்னக்கலார் பகுதியில் 15 செமீ மழை பொழிந்துள்ளது.
அதேபோல நேற்று அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "இன்று ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மழை எச்சரிக்கை: இதன் காரணமாக இன்று (மே 28) மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு.
அதேபோல, நாளை (மே 29) அன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கு (ரெட் அலர்ட்) வாய்ப்பு. வரும் ஜூன் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Kannan V author

    ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed