பிரம்மபுத்திரா நதிநீரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தடுத்குமா? இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
பிரம்மபுத்திரா நதி இந்தியாவில் பெருகுகிறதே ஒழிய அது குறையவில்லை சீனா 30 முதல் 35% வரையிலான பிரம்மபுத்திரா நதி நீரோட்டத்தில் பங்காற்றுகிறது
பிரம்மபுத்திரா
பிரம்மபுத்திரா நதி நீரின் ஓட்டத்தை சீனா தடுத்தால் இந்தியா என்ன செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து தீவிரவாத செயல்களை ஆதரிக்கும் போக்கை முற்றிலும் நிறுத்திக் கொள்ளும் வரையில் சிந்துநதி நீர் பாகிஸ்தானுக்கு பாயாது என இந்தியா உறுதிபட தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டை முடிவுக்கு வந்த போதிலும் சிந்து நதி நீர் திறப்பை மட்டும் இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் சிந்து நதி நீர் தொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிஃப் தனது நட்பு நாடான சீனா பிரம்மபுத்திரா நதி நீரை இந்தியாவிற்கு பாய விடாமல் தடுத்தால் என்ன செய்வீர்கள் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. ஒருவேளை சீனா பிரம்மபுத்திரா நதியில் பாயும் நீரோட்டத்தை குறைக்க முற்படுமானால் அது இந்தியாவிற்கு பலனளிப்பதாகவே இருக்கும் என கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், தற்போது பாகிஸ்தான் சீனா பிரம்மபுத்திரா நீரை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்தால் என்ன செய்யும் என நம்மை எச்சரிக்கிறது. இது அச்சம் கொள்ளப்பட வேண்டிய விஷயம் கிடையாது ஆதரப்பூர்வமாக ஒட்டுமொத்த தேசத்திற்கும் தெளிவுபடுத்தும் வகையில் இந்த கட்டுக் கதைகளை தற்போது தகர்த்தெறிவோம்.
பிரம்மபுத்திரா நதி இந்தியாவில் பெருகுகிறதே ஒழிய அது குறையவில்லை சீனா 30 முதல் 35% வரையிலான பிரம்மபுத்திரா நதி நீரோட்டத்தில் பங்காற்றுகிறது அதுவும் குறிப்பாக அது பணி உருகுதலால் நடைபெறுகிறது. திபெத்தில் குறைந்த அளவே மழைப்பொழிவும் பிரம்மபுத்திரா நதிக்கு பங்காற்றுகிறது.
அதே நேரத்தில் எஞ்சிய 65 முதல் 70% வரையிலான பிரம்மபுத்திரா நதியின் நீர், இந்தியாவில் உற்பத்தி ஆகிறது. அருணாச்சல் பிரதேசம், அசாம், நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் பருவ மழைகளால் இந்த நீர் கிடைக்கிறது குறிப்பாக Subansiri, Lohit, Kameng, Manas, Tanseri, Jia, Bharali, Kopili போன்ற துணை நதிகளும், Jaintia, Garo, Khasi மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் கிருஷ்னை, திகரு, குல்சி ஆகிய சிறு நதிகளும் பிரம்மபுத்திராவின் நீர் ஆதாரமாக திகழ்கின்றன
இந்திய சீன எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் ஒரு நொடிக்கு 2000 முதல் 3000 கியூபிக் மீட்டர்கள் என்ற அளவிலேயே இருக்கிறது இதுவே அசாம் மாநிலத்தில் பருவ மழைக்காலங்களில் நீரோட்டமானது ஒரு நொடிக்கு 15,000 முதல் 20 ஆயிரம் கியூபிக் மீட்டர்கள் ஆக அதிகரிக்கிறது இது பிரம்மபுத்திரா நதிக்கு இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பதற்கான ஒரு ஆதாரமாகும்
பிரம்மபுத்திரா நதியானது இந்தியா அதன் மேல் நீரோட்டத்தை சார்ந்து இருக்கும் ஒரு நதி கிடையாது இது பருவமழையை நம்பி இயங்கும் ஒரு இந்திய நதி அமைப்பாகும் இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு அது மேலும் பலமடைகிறது
பாகிஸ்தான் சொல்வது போல சீனா பிரம்மபுத்திரா நதிநீரை குறைக்கும் முற்பட்டால் கூட அது இந்தியாவிற்கு தான் பலனளிக்கும் அசாமில் ஏற்படும் பெருவாரியான வெள்ளம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களை பாதிப்படையாச்சிகின்றன இந்த பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படலாம்
மேலும் சீனா என்றைக்குமே பிரம்மபுத்திரா நதி நீரை வைத்து நம்மை அச்சுறுத்தியது கிடையாது இது தேவையற்ற ஒரு விவாதம் ஆகும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் பலனடைந்து வந்த பாகிஸ்தான் தற்போது பிரம்மபுத்திரா நீரை வைத்து இந்தியாவை பயம் கொள்ளலாம் என நினைக்கிறது ஒரே ஒரு இடத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நதி கிடையாது. இது நமது புவியியல் நமது பருவமழை மற்றும் நமது நாகரிக மெயில் தன்மையாகிவிட்டால் இயக்கப்படுகிறது..'
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Arun K author
மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க
முடிந்தது
Top News Today (12.06.2025): இன்றைய முக்கியச் செய்திகள்
குஜராத் விமான விபத்து: பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு பறந்த மெசேஜ்..
கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ குழந்தைகள், கணவர் குடும்பத்துக்கே விஷம் வைத்த இளம் பெண்..
இது முதல் முறையல்ல.. கேரளாவில் ஏற்பட்ட ஏர் இந்தியா கோர விமான விபத்து நினைவிருக்கா?
மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல் மீது விமானம் விழுந்ததில் 5 மாணவர்கள் பலி.. விமான விபத்தில் உயிரிழப்பு 170 ஆக அதிகரிப்பு..!
End of Feed
டாக்டர் டூ சினிமா நடிகை.. 'ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் புகழ் தீபா பாலு யார் தெரியுமா?
அவரை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பம் அடைந்தேன்.. பிறகுதான் திருமணம் செய்தேன்.. அமலா பால் ஓபன் டாக்!
அதைப் பார்த்துவிட்டு என் கணவர் 10 நாட்கள் என் பக்கத்தில் கூட வரவில்லை.. கீர்த்தி சுரேஷ் சொன்ன ஷாக் தகவல்!
Top News Today (12.06.2025): இன்றைய முக்கியச் செய்திகள்
குஜராத் விமான விபத்து: பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு பறந்த மெசேஜ்..