கள்ளக்காதல் ஜோடியை முச்சந்தியில் கட்டி வைத்து தண்டனை கொடுத்த ஊர்மக்கள்.. பரபரப்பு வீடியோ..!

இந்த நிலையில் மௌனிகாவின் வீட்டுக்கு வந்த சுவாமி மூன்று நாட்கள் அவரது வீட்டிலேயே தங்கி, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

பரபரப்பு வீடியோ.
கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடியை ஊருக்கு நடுவே கயிற்றால் கட்டி வைத்து தண்டித்ததுடன், இளைஞரை தூய்மைப்படுத்தும் சடங்கிலும் ஊர்மக்கள் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
தெலங்கானா மாநிலத்தின் பெடப்பள்ளி மாவட்டத்திலுள்ள சுல்தானாபாத் என்னும் ஊரைச் சேர்ந்த மௌனிகா என்ற நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அசோக் நகர் காலனி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
மௌனிகாவுக்கும் பூபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி என்ற இளைஞனுக்கும் இடையே பேஸ்புக்கில் அறிமுகம் ஆகி இருக்கிறது. ஆன்லைனில் தொடங்கிய இவர்களின் நட்பு பின்னர் கள்ளக்காதலாக மாறியது.
மௌனிகாவும் சுவாமியும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மௌனிகாவின் வீட்டுக்கு வந்த சுவாமி மூன்று நாட்கள் அவரது வீட்டிலேயே தங்கி, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது ஊர் மக்களின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து, இருவருக்கும் தகுந்த பாடம் கற்பிக்க நினைத்த ஊர் மக்கள், இருவரையும் பிடித்து ஊருக்கு பொதுவே உள்ள இடம் ஒன்றில் கட்டி வைத்தனர்.
அவர்கள் இருவரும் கெஞ்சியும் மனமிரங்காத ஊர் மக்கள் நீண்ட நேரம் இருவரையும் கட்டி வைத்தனர். பின்னர் சுவாமியை கெட்ட எண்ணத்தில் இருந்து விடுவிக்கும் விதமாக அவரை தூய்மைப்படுத்தும் சில சடங்குகளையும் ஊர் மக்கள் அவருக்கு செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னரே போலீசாரை வர வைத்து இருவரையும் ஊர் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சட்டத்தை கையில் எடுக்கும் வகையில் செயல்பட்ட ஊர் மக்களுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது.
Arun K author

மதுரைக்காரன்.. பொறியியல் பட்டதாரி.. 10+ ஆண்டுகள் முன்னணி செய்தி நிறுவனங்களி...மேலும் பார்க்க

முடிந்தது
Follow Us:
End of Feed