மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4000ஐ நெருங்கியது

இந்தியாவில் தற்போதைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000ஐ நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,961 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டிலேயே அதிக பாதிப்புகள் கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தில் 1,435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக மகாராஷ்டிரா 506 பேர், டெல்லி 483, குஜராத் 338 பேர், மேற்கு வங்க 331 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 189 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என்ற 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
ஏற்கனவே, தமிழகத்தில் 60 வயது நபர் உயிரிழந்த நிலையில், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 25 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் புதிய பாதிப்பு NB.1.8.1 மற்றும் LF.7 என்ற உருமாறிய தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது.
தற்போது பரவும் தொற்றின் வீரியம் சற்று குறைவாகவே இருந்தாலும், வயதானோர், இணை நோய் பாதிப்பு கொண்டவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
    Kannan V author

    ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed