IPL ல் RCB வென்றதற்கு JIO, VI, Airtel இலவச ரீசார்ஜ் தருகிறதா..? WhatsApp Group-ல் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிக்காதீங்க.. உஷார்படுத்தும் புதுச்சேரி போலீஸ்!
நம்பகமான வாட்ஸ் அப் குரூப்பில் கூட சில நேரம் நம்மை அறியாமலே, நம்முடைய பெயரில் சில மெசேஜ்களை அனுப்பிவிடுவோம்.. வெப்சைட்டில் ஏதாவது லிங்க்கை கிளிக் செய்து வாட்ஸ் அப்பில் தானாக மெசேஜ் பார்வேர்டு ஆவது போன்ற வலையில் சிக்கிக்கொள்ள நேரிடும். யாராவது சொன்னால் தான் அந்த மேசேஜ் எப்படி அனுப்பப்பட்டது என்பது நமக்கே தெரியும் என்ற நிலை இருக்கிறது.
FAKE RECHARGE MESSAGE
செல்போன் ரீசார்ஜ் ஆஃபர் என்ற பெயரில் ஒரு மோசடி விளம்பரம் பரவி வருகிறது; அதில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் சமீப நாள்களாகவே இணைய வழி சைபர் பண மோசடி குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம், வங்கிக்கணக்கு எண், பான் எண், ஓடிபி போன்றவற்றை வைத்து தான் மோசடிகள் அரங்கேறி வந்தன.
ஆனால், இப்போது எல்லாம் கவர்ச்சிகர விளம்பர அறிவிப்புகளை பவரவிட்டு பொதுமக்களுக்கு வலைவீசி சைபர் மோசடி கும்பல் பணத்தை அபகரித்து வருகின்றன. அப்படி ஒரு மோசடி விளம்பரம் செல்போன் ரீசார்ஜ் ஆஃபர் என்ற பெயரில் பரவி வருகிறது; அதில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் காவல்துறை வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, "ஐ.பி.எல். கிரிக்கெட் (IPL) போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி (RCB) வெற்றி பெற்றது. இதையொட்டி ஜியோ (JIO), வோடோபோன் (Vi) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச ரீ-சார்ஜ் (Free Recharge) வழங்குவதாக போலி இணையதள முகவரியுடன் வாட்ஸ் அப் (WhatsApp) குழுக்களில் தகவல் பரவுகிறது.
இந்த இணையதள முகவரியை ஆன்லைன் மோசடி கும்பல் உருவாக்கி பரப்பி வருகிறது. அந்த இணையதள முகவரி லிங்க்கை கிளிக் செய்து செல்ல வேண்டாம். அப்படியே கிளிக் செய்தால் அதில் கேட்கப்பட்டிருக்கும் செல்போன் எண், வங்கி கணக்கு விவரம், ரகசிய எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டாம். அப்படி தெரிவித்தால் அவரின் வங்கிக் கணக்கில் பணம் பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
எனவே சமூக வலைதளங்களில் வரும் தகவலை நம்ப வேண்டாம். பொதுமக்கள் சைபர் கிரைம் புகார்களை தெரிவிக்க 1930, 0413-2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது cybercrime.gov.in என்ற இனையதள முகவரியிலோ, சைபர் கிரைம் காவல் நிலையத்தை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kannan V author
ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்...மேலும் பார்க்க
முடிந்தது
Top News Today (12.06.2025): இன்றைய முக்கியச் செய்திகள்
குஜராத் விமான விபத்து: பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு பறந்த மெசேஜ்..
கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ குழந்தைகள், கணவர் குடும்பத்துக்கே விஷம் வைத்த இளம் பெண்..
இது முதல் முறையல்ல.. கேரளாவில் ஏற்பட்ட ஏர் இந்தியா கோர விமான விபத்து நினைவிருக்கா?
மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல் மீது விமானம் விழுந்ததில் 5 மாணவர்கள் பலி.. விமான விபத்தில் உயிரிழப்பு 170 ஆக அதிகரிப்பு..!
End of Feed
டாக்டர் டூ சினிமா நடிகை.. 'ஹார்ட் பீட்' வெப் சீரிஸ் புகழ் தீபா பாலு யார் தெரியுமா?
அவரை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பம் அடைந்தேன்.. பிறகுதான் திருமணம் செய்தேன்.. அமலா பால் ஓபன் டாக்!
அதைப் பார்த்துவிட்டு என் கணவர் 10 நாட்கள் என் பக்கத்தில் கூட வரவில்லை.. கீர்த்தி சுரேஷ் சொன்ன ஷாக் தகவல்!
Top News Today (12.06.2025): இன்றைய முக்கியச் செய்திகள்
குஜராத் விமான விபத்து: பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு பறந்த மெசேஜ்..