பொறுப்பு சுற்றுலா பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? கேரளா கண்ணூரில் சுற்றுலா செல்ல சூப்பர் வாய்ப்பு!

பொறுப்பு சுற்றுலா என்ற வார்த்தையை கூட நம்மில் பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டோம் . அப்படியான சுற்றுலாவிற்கு வாய்ப்பு கிடைத்தால் டக்கராக இருக்கும் தானே..?

சுற்றுலா
சுற்றுலா என்பது பல வகைகளில் உள்ளது. ஆன்மீக சுற்றுலா, இயற்கை சுற்றுலா, கலை படைப்புகளைத் தேடி செல்லும் சுற்றுலா, வேலைக்கான சுற்றுலா என்ற பல வகைகளில் இருந்தாலும் பொறுப்பு சுற்றலாம் என்று இருப்பதை பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.
ஆனால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் பொறுப்பு சுற்றுலா இயக்கம் என்ற ஒன்று இயங்கி வருகிறது. அதில் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பொறுப்பு சுற்றுலா செல்வதற்கான சுற்றுலா பேக்கேஜுகளும் கூட உள்ளன. அப்படியான சுற்றுலா பேக்கேஜ் ஒன்றைப் பற்றிதான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு பொறுப்பு சுற்றுலா இயக்கம் தொடங்கப்பட்டது. இது இங்கு உள்ள உற்பத்தி, கொள்முதல் மற்றும் விளைபோக அலகுகளை அடையாளம் கண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இதை பொறுப்பு சுற்றுலா பேக்கேஜாக வடிவமைத்துள்ளது. இதில் என்னவெல்லாம் பார்க்கலாம், என்னவெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறோம்.
நதி சுற்றுலா:
இந்த கண்ணூர் பொறுப்பு சுற்றுலாவில் மலநாடு -மலபார் நதி பயணத்தை ஒரு சுற்றுலா பேக்கேஜாக கொண்டு வந்துள்ளது. இதில் கப்பல் மூலம் வடக்கு மலபாரில் உள்ள ஆறுகளை இணைத்து பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
என்னவெல்லாம் பார்க்கலாம்?
கேரளாவின் பண்டைய வர்த்தக துறைமுகமாக கண்ணூர் இருந்து வந்தது இங்கே ஆட்சி செய்த ஒரே முஸ்லிம் அரச குடும்பமான அரக்கல் குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரக்கல் அருங்காட்சியகம், போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட செகண்ட் ஏஞ்சலோ கோட்டை ஆகியவற்றை இந்த பயணத் திட்டத்தின் மூலம் சுற்றிப் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் முத்தப்பன் கோவில் மற்றும் முழுப்பிலாங்காட் கடற்கரை போன்றவற்றையும் பார்க்கும் வாய்ப்பை இந்த சுற்றுலாவானது வழங்குகிறது.
ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையையும் இன்னொரு பக்கம் கடலையும் எல்லையாக கொண்ட கண்ணூரில் ஜாதிக்காய் பழம் மற்றும் கடவுளின் உணவு என்று அழைக்கப்படும் கொக்கோ பழங்கள் பண்ணைகளையும் ட்ரக்கிங் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
வகுப்புகள்...
அதுமட்டுமில்லாமல் தென்னை ஓலைகளை பின்னி அதன் மூலம் தேவையான பொருட்களை செய்யும் சிறப்பு வகுப்புகளை கூட நீங்கள் சேரலாம். கைத்தறி தொழில் தீவிரமாக செயல்படும். இந்த இடத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய கதைகளை பேசுவதோடு தறிகளில் நீங்களே நெசவு செய்யும் பயிற்சியையும் பெறலாம்.
இது மட்டும் இல்லாமல் ரப்பர் விவசாயம் செய்வது, நண்டு பிடிக்கும் வாய்ப்பு, பண்டைய கலையான மணி உலோகம் தயாரிப்பை செய்யவும் கற்றுக் கொள்ளவும் அதற்காகவே பெயர் பெற்ற கண்ணூரில் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் யாருக்குத்தான் அதை விட்டு வைக்க மனம் வரும்.
நீங்களும் கேரளாவின் பாரம்பரிய கலைகளையும் அங்குள்ள சிறப்புகளையும் ரசித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கேரளா பொறுப்பு சுற்றுலா மிஷன் சொசைட்டி என்ற தனி பொறுப்பு நிறுவனத்தின் மூலம் இந்த சுற்றுலா பேக்கேஜ்ஜில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு rtmission.knr@gmail.com என்ற ஈமெயில் முகவரியையோ அல்லது +914712334749 மூலம் அழைத்து தெரிந்துகொள்ளலாம்.
    Ilakkiya G P author

    கல்லூரி படிப்போடு தொடங்கிய எழுதும் பணி 7 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களின் அன...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed